மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் தனிக்கட்சி தொடங்குவது குறித்து வரும் 20ஆம் தேதி ஆலோசிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
மு.க.அழகிரி
மறந்த முன்னாள் முதலவரின் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி தற்போது தனிக்கட்சி தொடங்குவதாக கூறியுள்ளார். திமுகவின் தென்மண்டல செயலாளராக இருந்தவர் 2014 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் அவருடன் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர்.
பின்பு அவர் எந்த ஒரு நேரடி அரசியலில் பங்கேற்காமல் இருந்த இவர் தற்போது தனிக்கட்சி தொடங்குவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
ஆலோசனை
தனிக்கட்சி தொடங்குவது குறித்த ஆலோசனை வரும் நவ.20 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. கருணாநிதியின் பெயரில் இந்த தனிக்கட்சி தொடங்கலாம் என்றும் தகவலுடன் ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு பல்வேறு மாவட்டங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதகாவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை குறித்து பேசிய மு.க.அழகிரியின் ஆதரவாளர் இசக்கிமுத்து, தி.மு.கவிலிருந்து மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர் விலகி 6 ஆண்டுகள் ஆகிய நிலையில் இருந்து இதுவரை அமைதியாக இருந்தோம்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
எங்களுக்கு திமுக தவிர வேறு எந்த கட்சி இல்லை என்றும் ஆகையால் ஸ்டாலினை தலைவராக ஏற்று பேச்சுவார்த்தை நடத்தி திமுகவில் இணைய முற்பட்ட போதும் அதற்கு பயனில்லாமல் போனது. இத்தகைய காரணத்தால் தனிக்கட்சி தொடங்குவது குறித்த முடிவினை எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.