Friday, May 24, 2024

மதுரையில் பட்டப்பகலில் தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் படுகொலை – நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்!!

Must Read

மதுரையில் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற கொடூரமான நோக்கத்தில் சிலர் தவறுதலாக அப்பாவி இளைஞர் ஒருவரை வெட்டி கொலை செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது. கொலை செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடரும் கொலை சம்பவங்கள்:

மதுரை போன்ற மாவட்டங்களில் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று இளம் வயதினர் கூட கிளம்பியுள்ளனர். தொடர்ச்சியாக பல கொலைகள் அரங்கேறியுள்ளன. தற்போது அது போன்ற ஒரு திடுக்கிட வைக்கும் சம்பவம் மதுரையில் மீண்டும் அரங்கேறியுள்ளது. கீரைத்துறை என்ற பகுதியினை சேர்ந்தவர் வி.கே குருசாமி, இவர் திமுக கட்சியினை சேர்ந்தவர். அதே பகுதியினை சேர்ந்தவர் மறைந்த ராஜபாண்டி, இவர் அதிமுக முன்னாள் மண்டல தலைவர் ஆக பதவி வகித்தவர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த இருவர் குடும்பத்தினருக்கும் இடையே பல ஆண்டுகளாக பகை இருந்து வந்துள்ளது. இதனால் தற்போது வரை 15 கொலைகள் நடந்துள்ளன. என்ன தான் கொலை செய்தவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டாலும் குடும்பத்தினை சேர்ந்த பலரும் தொடர்ச்சியாக கொலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது குமாரசாமியின் உறவினர் ஒருவரை ராஜபாண்டி குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்தனர்.

அதற்கு பழி வாங்க வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை கீழவெளி வீதி பகுதியில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது ராஜபாண்டி குடும்பத்தை சேர்ந்த மணிகண்டன், முனுசாமி பயந்து தப்பி ஓடி விட்டனர்.

சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவும் வீடியோ:

அப்போது இவர்களுடன் வந்த உத்தங்குடி பகுதியினை சேர்ந்த முருகானந்தம் இந்த கும்பலிடம் சிக்கியுள்ளார். மணிகண்டன் மற்றும் முனிசாமி இருவரையும் வெட்ட முடியாத கோபத்தில் இருந்த அந்த கொலை கும்பல் முருகானந்தத்தை சரமாரியாக தாக்கி வெட்டி கொலை செய்துள்ளது. அதோடு மட்டும் நிறுத்தாமல் அவரது தலையினை துண்டித்து அருகில் உள்ள தேவாலயத்தின் வாசலில் வீசி விட்டு சென்று விட்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த கொலை சம்பவம் அருகில் உள்ள சிக்னல் கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த கொலை சமபவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்ட போலீசார் கொலை செய்தவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளை கைது செய்துள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடியும் வருகின்றனர். இந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சிக்கிக்கொள்ள போகும்  மனோஜ்-ரோகினி.., வண்டவாளம்  தண்டவாளம்  ஏறும்  தருணம்.., சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்!! 

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் இப்பொழுது பைனான்ஸ் ரீதியாக புதிய தொழிலை ஆரம்பித்துள்ள  நிலையில் விஜயா தனது மகனுக்கு பொறுப்பு வந்து விட்டதாக பெருமிதம் கொள்கிறார்....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -