தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமான வலம் வந்தவர் தான் சீமான். மேலும் இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டின் 3வது கட்சி பாஜகதான் என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீமான் ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில் மக்களவைத் தேர்தல் முடிவுகளில், நாம் தமிழர் வாங்கிய வாக்குகளை விட பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அதிக வாக்குகள் வாங்கினால் கட்சியை கலைத்து விடுகிறேன் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார். தற்போது இவரின் கருத்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Enewz Tamil டெலிக்ராம்
IPL 2024: இறுதிச்சுற்றுக்குள் நுழையப்போவது யார்?? ராஜஸ்தான் vs ஹைதராபாத் பலப்பரீட்சை!!