நீட் தேர்வு எதிராக அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யாவை கண்டித்து இந்து மக்கள் கட்சி கூட்டத்தில் பேசிய துணைப் பொதுச் செயலாளர் “சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு விவகாரம்:
நாடு முழுவது நீட் தேர்வு நடந்தது குறித்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த தேர்வினை தற்போது உள்ள சூழலில் நடத்த கூடாது என்று அனைவரும் போராடினர். அதே போல் கடந்த சில நாட்களுக்கு முன் திரையுலக நடிகரான சூர்யா தந்து ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து ஒரு அறிக்கையினை வெளியிட்டார்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
My heart goes out to the three families..! Can't imagine their pain..!! pic.twitter.com/weLEuMwdWL
— Suriya Sivakumar (@Suriya_offl) September 13, 2020
அவர் அதில் காரசாரமான விவாதங்களை முன் வைத்திருந்தார். அவரது விவாதங்கள் பெரிதாக அனைவர் மத்தியிலும் பேசப்பட்டது. அதனை பலரும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்தனர். நடிகர் சூர்யாவுக்கு ஆதரவும் கிடைத்தது.
“ஒரு லட்சம் பரிசு”
இப்படியாக இருக்க இந்து மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தர்மா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் போது அவர் பேசியதாவது “நடிகர் சூர்யா இடதுசாரி கட்சிகளுடனும் கூட்டணி வைத்துள்ளார். அவர் நீதிமன்றத்தினை அவமதிப்பதாக பேசியுள்ளார்.”
அனைத்து விதமான சரும பிரச்சனைகளுக்கு சூப்பரான ‘Face Pack’ இதோ உங்களுக்காக!!
“யார் ஒருவர் நடிகர் சூர்யாவை செருப்பால் அடிக்கிறாரோ அவருக்கு ரூபாய் ஒரு லட்சத்தை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வழங்குவார்” இவ்வாறு அவர் பேசினார். இவரது பேச்சு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பலரும் இவரது பேச்சிற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.