கடந்த 2018 ம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் தான் துப்பறிவாளன். அதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தை விஷால் தயாரித்து இயக்குனர் மிஷ்கின் அவர்கள் இயக்கி வந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்து ஓர் முக்கிய தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அதாவது துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் தென்னிந்திய முன்னணி நட்சத்திரங்களுடன் பான் இந்தியா படமாக உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாத இறுதிக்குள் மீண்டும் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
TET தேர்வர்களே., பேப்பர் 1 & 2 தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான புக் மெட்டீரியல்., மிஸ் பண்ணிடாதீங்க!!