தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதாலும், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாலும் முக்கிய சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
TET தேர்வர்களே., பேப்பர் 1 & 2 தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான புக் மெட்டீரியல்., மிஸ் பண்ணிடாதீங்க!!
அதன்படி மே 7 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை அமல் படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் இ-பாஸ் பெறுவதற்கான இணையதளத்தை, தற்போது தமிழ்நாடு தொழில்நுட்ப துறை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று (மே 2) மாலை வெளியிடப்படும் என கூறியுள்ளனர்.