தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆண்டுதோறும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டின் மக்களவைத் தேர்தல் காரணமாக செமஸ்டர் தேர்வுகள் தள்ளி போக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வந்தது. ஆனாலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு, வரும் மே 15ஆம் தேதி செமஸ்டர் தேர்வு தொடங்க இருப்பதாக, அண்மையில் அட்டவணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் பெரும்பாலான கல்லூரிகளில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால், தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி ஜூன் 6ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என தெரிவித்துள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு https://www.annauniv.edu/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்துக் கொள்ளலாம்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம் இதோ!!!