ஏழை, நடுத்தர மக்களின் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ‘கிசான் விகாஸ் பத்ரா திட்டம்’, பெரும்பாலானோர் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதாக கூறப்படுகிறது. 115 மாதங்கள் முதிர்ச்சி கொண்ட இத்திட்டத்தில், பணத்தை எடுக்கும் வரை தொடர்ந்து வட்டி வரவு வைக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். தற்போது இத்திட்டத்தில் ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
ICC தரவரிசை பட்டியல்.. முதலிடத்தை தக்க வைத்த சூர்யகுமார் யாதவ்.. விராட்,ரோகித் நிலை என்ன??
இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு வயது வரம்பு இல்லாவிட்டாலும். ரூ.1,000, ரூ.5000, ரூ.10,000 மற்றும் ரூ.50,000 ஆகிய மதிப்புகளில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு கிடையாது. அப்படியே 10 வருடங்கள் முதலீடு செய்து வந்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் என கூறப்படுகிறது. இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற ஆர்வமுள்ளவர்கள் தகுந்த ஆவணங்களை கொண்டு அருகாமையில் உள்ள தபால் அலுவலகத்திற்கு நேரில் அணுகலாம்.