Sunday, April 28, 2024

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை – டிச.2ல் அதிகனமழை வெளுத்து வாங்கும்!!

Must Read

தெற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தீவிரமான தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும், இதனால் டிசம்பர் 2 ஆம் தேதி தமிழகத்திற்கு அதி தீவிரமான கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை:

கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது “நிவர்” புயலாக உருவெடுத்தது. இதனை அடுத்து தற்போது தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது டிசம்பர் 2 ஆம் தேதி தமிழகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை தாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த மாற்றத்தால் தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், கேரளா, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் டிசம்பர் 2 ஆம் தேதி “ரெட் அலெர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என்றும் தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு கட்டணத்தை அண்ணா பல்கலை திருப்பி தர தேவையில்லை – உயர்நீதிமன்றம் அதிரடி!!

பின், டிசம்பர் 2 ஆம் தேதி தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் கேரளா, புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. தெற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலைகொண்டுள்ளதால் தென் மாவட்டங்களில் அதி கனமழை பொழியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -