கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு இறுதிபருவம் தவிர்த்து பிற தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதில் அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ரத்தான தேர்வுகளுக்கு மாணவர்களை கட்டணம் செலுத்தக்கோரி அண்ணா பல்கலை வலியுறுத்துவதாகவும், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி தர உத்தரவிடுமாறும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் ஊரடங்கு டிச. 31 வரை நீட்டிப்பு!!
அதனை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளனர். அதாவது, ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான கட்டணத்தை மாணவர்களிடம் அண்ணா பல்கலை திருப்பி தர தேவையில்லை என அதிரடியாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.