பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் குழந்தைக்கு இதயத்தில் பிரச்சனை இருந்ததை அடுத்து யாரிடம் பணம் வாங்குவது என்று தெரியாமல் திணறிக்கொண்டுள்ளார். இந்நிலையில் குழந்தைக்கு நல்ல படியாக ஆபரேஷன் நடக்குமா?? கண்ணம்மாவிற்கு பணம் உரிய நேரத்தில் கிடைக்குமா?? இன்றைய எபிசோடில் பாப்போம்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மாவில் முந்தைய எபிசோடில் சௌந்தர்யா வேலை விஷயமாக ஹைதராபாத் செல்கிறார். மேலும் குழந்தையை அறிவிடம் ஒப்படைத்து விட்டு செல்லலாம் என்றும் முடிவெடுக்கிறார். இந்நிலையில் கண்ணம்மா குழந்தைக்கு பால் கொடுக்க குழந்தையை எழுப்ப குழந்தை எழுந்திருக்கவில்லை.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதனால் பதட்டமடைந்து ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்ல குழந்தைக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பதாக கூறுகின்றனர். மேலும் 2 லட்சம் பணம் தேவைப்படும் என்றும் கூறுகின்றனர். கண்ணம்மா பணத்திற்கு எங்கு செல்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோடில் சௌந்தர்யாவிடம் இருக்கும் குழந்தை அழுதுகொண்டே இருக்க சௌந்தர்யாவுக்கு ஏதோ தப்பாக தோன்றுகிறது. வேணுவிடம் இரட்டை குழந்தையாக பிறந்தால் இருவரும் ஒரே நேரத்தில் தான் அழுவார்கள், சிரிப்பார்கள்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இப்பொழுது ஹேமா அழுகும்போது கண்ணம்மாவிடம் இருக்கும் குழந்தைக்கு எதுவும் பிரச்சனை இருக்குமோ?? என்று கூற வேணு சௌந்தர்யாவை சமாதானம் செய்கிறார். அடுத்ததாக கண்ணம்மா பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறார்.
அப்பொழுது கண்ணம்மாவின் தந்தை சண்முகம் அவருக்கு கால் செய்து குழந்தை எப்படி உள்ளது என விசாரிக்கிறார். கண்ணம்மாவும் அழுதுகொண்டே நடந்தவற்றை கூற அப்பொழுது தான் சண்முகம் கண்ணம்மா சிறு வயதில் சேமிப்பு கணக்கு ஆரம்பித்து பன்னிரண்டாம் வகுப்பு வரை அவர் கட்டிய பணம் இப்பொழுது 2 லட்சமாக வட்டி போட்டு வந்துள்ளதை சொல்ல கண்ணம்மாவிற்கு உயிரே வருகிறது.
அப்பாவிற்கு நன்றி சொல்லி மருத்துவமனையில் பணத்தையும் காட்டுகிறார். அந்த சமயம் பார்த்து வருண் அங்கு வர கண்ணம்மா அதிர்ச்சியடைகிறார். வருணும் தன்னால் தான் உனக்கு இந்த நிலைமை என்று மன்னிப்பு கேட்கிறார். கண்ணம்மா தனது குழந்தையின் நிலைமையை சொல்ல வருணும் செய்வதறியாது இருக்கிறார்.
கண்ணம்மா கூடவே இருக்க வேறு சிறிது நேரத்திற்கு பிறகு அங்கிருந்து செல்கிறார். குழந்தைக்கு உள்ளே ஆபரேஷன் நடந்துகொண்டிருக்க அப்பொழுது பாரதியும் வருகிறார். அங்கிருக்கும் டாக்டர் இவங்க குழந்தைக்கு தான் ஆபரேஷன் என்று கூற கண்ணம்மா பாரதியை பார்த்து அழுது கையெழுத்து கும்பிடுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.