தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் தரும் பொருட்டு பல நல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் பள்ளி மேலாண்மை குழு நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது மாணவர்களுக்கு சீருடை குறித்த சுற்றறிக்கை அனுப்பட்டதுள்ளது.
அதாவது பள்ளி மேலாண்மை குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் 1369 சீருடை சம்மந்தப்பட்டதாகவே உள்ளதால் சரியான அளவில் சீருடை வழங்குவதை எஸ்எம்சி குழு உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, குறிப்பிடப்பட்டுள்ள அந்த 50 பள்ளிகளில் உள்ள மாணவர்களின் சீருடையை தையல் சார்ந்த பள்ளிகளே கவனித்து சரியாக செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் சரியான தகுதி பெற்ற தையல் கலைஞரை நியமிக்கும்படியும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 2 தேர்வு தேதி?? இப்போவே இதெல்லாம் ரெடியா வச்சுக்கோங்க!!
இந்த வழிகாட்டுதல்கள் படி தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 4 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், நடுநிலை பள்ளிகளில் 1 முதல் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சீருடை அளவை எடுக்க வேண்டும். மேலும் இந்த விவரங்களை தலைமை ஆசிரியரே சேமித்து அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.