தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 27) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும்.
இதைத்தொடர்ந்து சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும். இத்தகைய வானிலை மாற்றத்தால் மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதால் எச்சரிக்கை எதுவும் அளிக்கப்படவில்லை.
Enewz Tamil டெலிக்ராம்
அடேங்கப்பா., ரத்னம் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? கம்பாக் கொடுத்த விஷால்!!