7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி முதல் அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 8வது ஊதியக்குழு எப்போது? அமைக்கப்படும் என ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கிடையில் 8 வது ஊதியக்குழு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என DoPT-யிடம் இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் கோரிக்கை கடிதம் எழுதி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் இப்படி ஒரு காட்சியில் நடித்தவரா?? மனுஷன் இதெல்லாம் பண்ணி இருக்காரா??
இந்த கடிதத்தை மேலதிக நடவடிக்கைக்காக பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT), நிதி அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளது. இதன் காரணமாக மக்களவை தேர்தல் முடிவு வெளியிடப்பட்ட பிறகு, புதிய ஊதியக்குழு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவித்து வருகின்றனர். அப்படி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அமலுக்கு வரும் பட்சத்தில் பெரிய அளவிலான ஊதிய உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது.