சமீபத்தில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை மட்டுமல்லாமல் அவரது ஆதரவாளர்களுடன் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக சிறப்பு புலனாய்வு குழு (SIT) கைது செய்தது. இதைத் தொடர்ந்து மூன்று நாட்களாக போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வந்த நிலையில், கூடுதலாக ஐந்து நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்தில், சிறப்பு புலனாய்வு குழு மனு தாக்கல் செய்திருந்தது.
அதன்படி மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “மே 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் ரேவண்ணாவை, சிறையில் அடைக்க வேண்டும்.” என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.