மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்திற்கு காரணம் அவரது கணவர் ஹேம்நாத் தான் என்று சித்ராவின் செல்போன் பதிவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு தான் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரியவந்துள்ளது.
பிறந்தநாள் விழாவில் மலர்ந்த காதல்:
பொதுவான நண்பர் ஒருவரின் பிறந்தாள் விழா ஒன்றில் தான் சித்ராவும் ஹேம்நாத்தும் முதல் முறை சந்தித்து உள்ளனர். அதன் பிறகு இருவருக்கும் காதல் மலர்ந்து இவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆரம்பத்தில் சுமூகமாக இருந்த இந்த உறவில் நாளடைவில் சந்தேகம் முளைக்க தொடங்கியுள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
காரணம் சித்ரா தன்னுடன் நடிக்கும் நடிகருடன் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடித்தது தான். இதனால் ஹேம்நாத்திற்கு சித்ராவின் மீது சந்தேகம் வந்துள்ளது. இனிமேல் இது போல் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிக்க கூடாது என்று ஹேம்நாத் சித்ராவிடம் சண்டை போட்டுள்ளார்.
போலீசார் விசாரணை:
இது தொடர்பாக சித்ரா ஹேம்நாத்தின் அப்பாவிடம் ஹேம்நாத் தன்னை சந்தேகப்பட்டு சண்டையிட்டு கொடுமைப் படுத்துவதாகவும் செல்போனில் கூறி பதிவு செய்துள்ளார். அந்த பதிவு அழிந்துள்ள நிலையில் சைபர் கிரைம் போலீசாருக்கு அது அனுப்பி வைக்கப்பட்டு பேசியுள்ள தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆர்.டி.ஓ விசாரணை சித்ராவின் பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் முடிந்த நிலையில் இன்று சிறையில் உள்ள ஹேம்நாத்தை அழைத்து வந்து ஆர்.டி .ஓ விசாரணை நடத்த உள்ளனர்.
சித்ராவின் செல்போனில் இருந்த ஆதாரங்களின் அடிப்படையில் தான் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஹேம்நாத் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.