முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா வரும் ஜனவரி மாதம் விடுதலையாக இருக்கிறார் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் விடுதலை ஆகும் போது எந்த மாதிரியான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்பது பற்றியும் தெரிவித்துள்ளனர்.
சசிகலா கைது:
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உட்பட நான்கு பேருக்கு சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்தது. இதனால் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறைச்சாலையில் 4 ஆண்டு காலமாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றார். இதனை அடுத்து அவர் கடந்த மாதம் தனது அபராத தொகையான 10 கோடி ரூபாயை செலுத்தினார். அவரது தண்டனை காலம் வரும் ஜனவரி மாதம் 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதனை அடுத்து அவர் சிறையில் இருந்து 27 ஆம் தேதி வெளிவருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அவர் விடுதலையாகும் போது அவரது தொண்டர்கள் அவரை பார்க்க வருவார்கள் என்ற காரணத்தால் அவர் மற்ற சிறைக்கைதிகள் வெளியாகும் போது விடுதலை செய்யாமல் இரவு 9:30 மணி அளவில் விடுதலை செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் விடுதலையாகும் போது எந்த மாதிரியான நடவடிக்கைகளை சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
- சசிகலா விடுதலையாகும் போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் சசிகலாவின் தொண்டர்கள் சிறை வளாகத்திற்குள் வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
- சசிகலாவை பாதுகாப்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தின் எல்லையான அத்திப்பள்ளியில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனத்தில் அனுப்ப வேண்டும்.
- சசிகலா விடுதலையாகும் போது அன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வர சிறைத்துறை அதிகாரிகளுக்கு உரிமை உள்ளது.
இந்த அறிக்கையில் இவ்வாறாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையினை கர்நாடகா அரசின் உளவுத்துறை, சிறைத்துறை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது.