பலத்த பாதுகாப்புடன் ஆர்.டி.ஓ விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் ஹேமந்த் – உண்மை வெளிவருமா??

0

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்த காரணத்தால் அவரது கணவர் ஹேமந்த்தை நாசரேத் பேட்டை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவரை ஆர்.டி.ஓ விசாரணைக்கு துப்பாக்கி எந்த பலத்த பாதுகாப்பதுடன் ஹேமந்த்தை வேன்னில் அனைத்து சென்றனர்.

சித்ரா தற்கொலை

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது. மேலும் இத்தனை நாட்கள் விசாரணையில் ஹேமந்த் தான் அவரின் தற்கொலைக்கு தூண்ட காரணமாக இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சித்ராவின் ரசிகர்கள் ஹேமந்த் மீது கொலை வெறியில் உள்ளனர் என்றே சொல்லலாம். இந்நிலையில் சித்ராவிற்கு ஹேமந்த்திற்கு திருமணம் ஆனதால் இந்த வழக்கு ஆர்.டி.ஓ வில் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பதாக பொன்னேரி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார் ஹேமந்த். இன்று ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ் ஹேமந்தை விசாரிப்பதற்காக சிறைத்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட் உள்ளிட்ட 9 பேர் பாதுகாப்புடன் துப்பாக்கி ஏந்தி ஹேமந்தை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். விசாரணைக்கு பின்னர் இன்னும் பல தகவல்கள் கிடைக்கலாம் என வட்டாரங்கள் கூறியுள்ளது. நாளுக்கு நாள் சித்ராவின் தற்கொலை விஷயத்தில் பல மர்ம முடிச்சுகள் அவிழ்ந்து வருகின்றனர். மேலும் ரக்சன் சித்ரா இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் எந்த விஷயமும் இதுவரையிலும் தெளிவாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here