தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தொடர் கனமழை:
கடந்த மாதம் தமிழகத்தில் பருவமழை துவங்கியது. இதன் காரணமாக பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. தற்போது வரும் நாட்களில் குளிர் காற்று அதிகமாக வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மழை சற்று குறைவாக தான் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மற்ற கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய உள்ளது. அடுத்த 72 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், காரைக்கால், புதுவை மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும், குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் கடலோர தமிழக மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.