Tuesday, May 7, 2024

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

Must Read

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மீனவர்களுக்கு எந்த விதமான எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

பருவநிலை மாற்றம்:

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக எல்லா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வருகிறது. தற்போது அடுத்த 3 நாட்களுக்கான வானிலை அறிவிப்பினை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி,தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆகிய இடங்களில் மிதமான முதல் லேசான மழை பெய்யும். அடுத்த 48 மணி நேரத்தில் (07/11/2020) தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், கடலூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.

08/11/2020 அன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையினை ஒட்டியுள்ள பகுதிகளில் மிக கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். சில இடங்களில் லேசானது முதல் மிக கனமழை பெய்ய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பநிலை மற்றும் மழைப்பதிவு:

தமிழகத்தில் வெப்பநிலையினை பொறுத்தவரை அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தாரி பகுதியில் அதிகபட்சமாக 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது, கெட்டி பகுதியில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குன்னுர், திருச்சுழி, பரமக்குடி பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறைந்தபட்சமாக ராசிபுரம் மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC தேர்வர்களே., குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுக்கான புக் மெட்டீரியல்., அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC தேர்வர்களே., குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுக்கான புக் மெட்டீரியல்., அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -