Monday, May 6, 2024

உலகிலேயே அதிகமான விலைக்கு ஏலம் போன கேம் – சூப்பர் மேரியோ ப்ரோஸ் 3!!

Must Read

உலகிலேயே அதிகமான விலைக்கு ஏலம் போன வீடியோ கேமாக மாறியுள்ளது, சூப்பர் மேரியோ ப்ரோஸ் 3. 20 பேர் இந்த ஏல நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, சூப்பர் மேரியோ ப்ரோ என்இஎஸ் பல கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த கேம் அந்த சாதனையினை முறியடித்துள்ளது.

சூப்பர் மேரியோ ப்ரோஸ் 3:

தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் அனைவர்க்கும் அறிமுகமான போது குழந்தைகள் அதிகமாக விளையாடுவது, வீடியோ கேம்ஸ் தான். குழந்தைகள் சில காலம் வரை அதற்கு அடிமையாக இருந்தனர். வீடியோ கேம்களை அதிகமான விளையாடியவர்களுக்கு சூப்பர் மேரியோ ப்ரோஸ் 3 கேம் பற்றி தெரியும். இந்த சூப்பர் மேரியோ ப்ரோஸ் கேம்களில் மொத்தமாக 23 பாகங்கள் உள்ளன. அதில் சூப்பர் மேரியோ ப்ரோஸ் 3 தான் மிகவும் பிரசித்தம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படி இருக்க இந்த கேம்கள் நாளடைவில் விளையாட ஆட்கள் இல்லாமல் போனது. இன்று உள்ள குழந்தைகளும் காலத்திற்கு தகுந்தாற் போல் மாறினர். தற்போது இந்த சூப்பர் மேரியோ ப்ரோஸ் 3 கேம் ஏலத்திற்கு வந்தது. இந்த ஏலத்தில் 20 பேர் கலந்து கொண்டனர். ஏலத்தின் ஆரம்ப தொகையாக 62 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டது. அதில் இந்த கேம் 1,56,000 டாலர்களுக்கு ஏலம் போய் உள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 1,15,48,758 ரூபாய்க்கு இந்த கேம் விலை பெற்றுள்ளது. ஏற்கனவே சூப்பர் மேரியோ ப்ரோ என்இஎஸ் 11,400 டாலர்களுக்கு ஏலம் போனது. தற்போது அந்த சாதனையினை சூப்பர் மேரியோ ப்ரோஸ் 3 கேம் முறியடித்துள்ளது. ஒரு வீடியோ கேம் இந்த அளவிற்கு ஏலம் போய் இருப்பது இதுவே முதல் முறை என்று ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம்., பாமக  அன்புமணி வலியுறுத்தல்!!

தமிழகத்தில் வேளாண் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -