கடந்த சில ஆண்டுகளில் உலக அளவில் மக்கள் அனைவராலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் செயலி என்றால் அது, வாட்ஸ்அப் தான். இந்த நிறுவனம், ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கையை வெளியிட்டு வருகிறது.
திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவால்.., முதல் நாளே இத்தனை சலுகைகளா??
அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 76 லட்ச வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப விதி, 2021 சட்டத்தின் கீழ் பயனர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் வாட்ஸ் அப் சேவை விதிகளை மீறியதின் காரணமாக இந்த கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.