தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியவர்கள், விதவை உள்ளிட்டவர்களுக்கு முதியோர் ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள மாநில அரசின் நிதி பற்றாக்குறை காரணமாக சமூக பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு, சரியான நேரத்தில் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
முதல்வர் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் திடீர் திருப்பம்.., உயர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு!!!
இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்ட நிலையில், “நல ஓய்வூதியம் என்பது உரிமையல்ல, மாநில அரசின் உதவி மட்டுமே:” என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஓய்வூதியத்தை எப்போது? எந்த விகிதத்தில் வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.