திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவால்.., முதல் நாளே இத்தனை சலுகைகளா??

0
திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவால்.., முதல் நாளே இத்தனை சலுகைகளா??
கடந்த மார்ச் 21ம் தேதி மது ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் காவல் வரும் வரும் ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர் நேற்று திகார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். வழக்கமாக திகார் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளுக்கு தினமும் பருப்பு சாம்பார், சப்ஜி மற்றும் ஐந்து ரொட்டிகள் அல்லது அரிசி சாதம் உணவாக வழங்கப்படும். ஆனால் கெஜ்ரிவால் முதல் மந்திரி என்ற அடிப்படையில் அவருக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோயாளியான இவருக்கு வீட்டில் தயாரித்த உணவுகளும், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் தான் வழங்கப்படுகிறது. ஒருவேளை சர்க்கரை அளவு குறைந்தால் அவருக்கு உயர்தர சாக்லேட் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட படுக்கை விரிப்புகள், உடல் நிலையை கண்காணிக்க மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர அவர் படிப்பதற்கு பகவத் கீதை, ராமாயணம் போன்ற புத்தகங்கள், பொழுதுபோக்கிற்காக டிவியும் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here