‘திடீர்னு வந்து என்ன கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டாரு, நான் ஷாக் ஆகிட்டேன்’ – ஆகாஷ் பற்றி மனம் திறக்கும் வனிதா!!

0

பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமான வனிதாவின் மூன்றாவது திருமணம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலும் தற்போது வனிதாவின் பல வீடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு வீடியோவில் தனக்கும் ஆகாஷ் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகளை பற்றி பகிர்ந்துள்ளார் வனிதா.

வனிதா

தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் வனிதா பிக் பாஸ் மூலம் அறிமுகமானவர். மேலும் குக் வித் கோமாளியின் டைட்டில் வின்னரும் இவர் தான். இவருக்கென்று தனி ரசிகர்களும் இருந்தனர். இந்நிலையில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு பல பிரச்சனைகளில் சிக்கினார். வயதுக்கு வந்த பெண்ணை வைத்துக்கொண்டு இதெல்லாம் தேவையா என்றும் பலர் அவரை விளாசினர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனாலும் அடங்காமல் பல வீடீயோக்களை வெளியிட்டார். தற்போது இவர்களின் பிரேக்கப் விஷயம் அதை விட சச்சையை கிளப்பியது. வனிதா விஷயம் என்றாலே பலரும் தனி ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றே சொல்லலாம். இந்த பிரச்சனைகளுக்கு இடையில் வனிதாவின் பழைய வீடீயோக்கள் எல்லாம் ட்ரென்ட் ஆகி வருகிறது. அதில் தனது முதல் கணவனான ஆகாஷ் பற்றி கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ஆகாஷ் பற்றி வனிதாவுக்கு எதுவுமே தெரியாதாம். திடீரென ஒரு நாள் வந்து வனிதாவிடம் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?? என்று என்று கேட்டுள்ளார். இதனால் வனிதாவும் ஷாக் ஆனாராம். மேலும் எனக்கு அப்பொழுது எந்த உணர்வும் தோன்றவில்லை. ஆனால் ஒருவர் இப்படி வந்து கேட்டதால் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதை நான் என் அம்மாவிடம் கூறினேன். எங்க வீட்டில் மிகவும் கண்டிப்புடன் இருப்பார்கள். இதை சொன்னதும் எனது மொபைல் எல்லாவற்றையும் வாங்கி உள்ளேயே அடைத்து வைத்தார்கள். பிறகு ஆகாஷ் வந்து வீட்டிற்கு பேச என்ன மாயமோ எனது அப்பா ஒத்துக்கொண்டார். அப்பொழுது எனக்கு 18 வயது. அதன் பிறகு திருமணம் முடிந்து நான் தயாரிப்பாளராக பணிபுரிந்து கொண்டிருந்தேன்.

நான் நடிப்பது ஆகாஷ்க்கு பிடிக்கவில்லை. இதனாலேயே பல சண்டைகளும் நடந்தது. அவருக்கும் புத்தி சொல்லும் அளவிற்கு யாரும் இல்லை. ஆகாஷ் மிகவும் நல்லவர். அவரை பற்றி நான் குறைகூறவில்லை. எனக்கு 25 வயதில் இப்படியே என் வாழ்கை போய் விடுமோ என்ற பயத்தில் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்தேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here