கொரோனா தடுப்பு குறித்து இன்று எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். இந்தியா முழுவதும் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா..!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது இந்தியாவில் 5,356 மேற்பட்டோர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 468 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளவர்கள். கொரோனா தொற்று பாதிப்பினால் உயிரிழந்தவர்கள் 160 பேர்.
ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் சில வாரங்களுக்கு நீட்டிக்குமாறு மாநில அரசுகள் மற்றும் நிபுணர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளதை அடுத்து இன்று எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
நீட்டிக்கப்படுமா ஊரடங்கு..!
பிரதமர் மோடி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடன் இன்று காலை 11 மணியளவில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உரையாடுகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பார்லிமென்ட்டின் லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளிலும் 5 க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை கொண்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கப்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் எனக்கூறப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |