இந்திய அணியில் ஹிட்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கேப்டன் ரோஹித் சர்மா தனது 37 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஜூன் 2007ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக அறிமுகமானார். ஒரு நாள் கிரிக்கெட்டை கையாள்வதில் ரோகித் மிகத் திறமையானவர். இவர் இந்த ஒரு போர்மட்டில் துல்லியமாகவும், சிறப்பாகவும் விளையாடக்கூடிய ஆற்றல் பெற்றவர்.
6000+ காலிப்பணியிடங்கள்.., இதை செஞ்சா கைநிறைய சம்பளத்துடன் வேலை.., உடனே முந்துங்க!!
இவரின் சிறப்பு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். தற்போது உள்ள வீரர்களில் உலகிலேயே தலைசிறந்த ODI கிரிக்கெட் வீரராக ரோகித் சர்மா விளங்குகிறார் என்பது சிறப்பிற்குரியது.