இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் 30 நாட்களில் 406 பேருக்கு வைரஸை பரப்ப முடியும் என மத்திய சுகாதார அதிகாரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.
இந்தியாவில் கொரோனா:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது 500க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதால் இனி வரும் காலங்களில் வைரஸ் தாக்கம் தீவிரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியே சுற்றினால் 30 நாட்களுக்கு 406 பேருக்கு வைரஸை பரப்ப முடியும் என இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |