இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடத்த மார்ச் 22ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்கள் குவித்தது. அதிகபட்சமார ரவீந்திர ஜடேஜா 57 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி விளையாடியது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடினர். அதன் பிறகு வந்த நிக்கோலஸ் பூரன்சிறப்பாக விளையாடி 3 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 23 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் லக்னோ அணி 19 ஓவரில் 180 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.