Friday, April 26, 2024

8 வருடங்களுக்கு பிறகு அம்மாவை பற்றி கேட்கும் பாரதியின் குழந்தை – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

Must Read

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஹேமா மற்றும் சௌந்தர்ய லட்சுமி இருவரும் பார்ப்பதற்கு ஒன்றாக இருப்பதை கண்ணம்மா கண்டுபிடிக்கிறார். கோவிலில் சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஹேமாவிற்கு எதிராக சௌந்தர்யா வருவதை பார்த்து இருவரும் ஒன்றாக இருப்பதை பாரதியும் உணர்கிறார்.

“8 வருடங்களுக்கு பின்பு”:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் தற்போது 8 வருடங்களுக்கு பின்பான கதைக்களத்தை காட்டுகின்றனர். இதில் கண்ணம்மாவின் குழந்தை துறுதுறு என்று இருக்கின்றது. அதே சமயம் பாரதியின் குழந்தையும் அப்படி தான் உள்ளது. கண்ணம்மா மற்றும் பாரதி இருவரும் ஒரே கோவில் விழாவில் பங்கேற்க வருகின்றனர்.

Image Credits - Disney + HotStar
Image Credits – Disney + HotStar

இதில் இன்று சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அந்த அசுரன் பொம்மையை அழிக்க ஹேமாவிற்கு டோக்கன் கிடைக்கிறது. அவர் அம்பு விட்டு அதனை அழிக்க நினைக்கும் போது சௌந்தர்யா வந்து விடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Image Credits – Disney + HotStar

தான் வைத்துள்ள டோக்கன் தான் உண்மையானது என்று சௌந்தர்யா வாதாடுகிறார். ஒரு சின்ன குழந்தை இப்படி வாதாடுவது அனைவரையும் ஆச்சரியபட வைக்கிறது. அனைவரும் சௌந்தர்யாவை சமாதானப்படுத்த நினைக்கின்றனர். ஆனால், சௌந்தர்யா அதனை ஏற்க மறுத்து தான் அம்பு விடுவதில் உறுதியாக இருக்கிறார்.

கண்ணம்மா போல் ஹேமா இருக்கிறாள்:

இதனால் இருவரும் சேர்ந்து அம்பு விடலாம் என்று பாரதி சமாதானம் செய்து அம்பு விட வைக்கிறார். இதனை முதலில் இருவரும் மறுத்தாலும், பின் ஒருவழியாக ஒத்து கொண்டு அம்பு விடுகின்றனர். இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் அம்பு விடுகின்றனர்.

Image Credits - Disney + HotStar
Image Credits – Disney + HotStar

அசுரன் பொம்மை பட்டாசு சத்தங்களுடன் வெடிக்கின்றது. சௌந்தர்யா கண்ணம்மா குழந்தையிடம் பேர் என்ன என்று கேட்கிறார். ஆனால் சத்தத்தில் பெயர் சொன்னது அவருக்கு கேட்கவில்லை. இதனையடுத்து பாரதி, ஹேமா மற்றும் வெண்பா மூவரும் காரில் வீட்டிற்கு கிளம்புகின்றனர். அப்போது ஹேமா தனது அம்மாவை பற்றி பாரதியிடம் கேட்கிறார். இதனால் பாரதி சட்டென்று கவலை அடைகிறார்.

Image Credits - Disney + HotStar
Image Credits – Disney + HotStar

கொரோனா தடுப்பூசி – அமெரிக்காவில் முதலாவதாக போட்டுக்கொண்டே பெண் செவிலியர்!!

இதனால் சோர்வாக வீட்டிற்கு பாரதி மற்றும் ஹேமா வருகின்றனர். சௌந்தர்யா ஏன் இவ்வளவு லேட்? என்று கேட்கிறார். உடனே அகில் முந்தி கொண்டு வெண்பா தான் காரணம் என்றதும் பாரதி கோபத்தில் ரூமிற்கு சென்று விடுகிறார்.

Image Credits - Disney + HotStar
Image Credits – Disney + HotStar

கடைசியாக, ஹேமா பேசுவதை வைத்து அவள் கண்ணம்மா போல் உள்ளதாக கூறியதும் சௌந்தர்யா கவலை அடைகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -