விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியின் பாடு சமீப காலமாகவே திண்டாட்டமாகவே இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி இன்னொரு பக்கம் ஜீவாவை கண்டுபிடிக்கும் வேளையில் மனோஜ் மற்றும் ரோகினி களமிறங்கியுள்ளனர்.
அதற்கு ஏற்றார் போல ஜீவாவும் இப்பொழுது முத்துவின் கண்ணில் சிக்கி விட்டார். ஆனால் முத்துவிற்கு ஜீவாவை தெரியாது என்பதால் அடுத்தடுத்து என்ன நடக்குமோ என்ற பதட்டத்துடன் ரசிகர்கள் சீரியலை கண்டுகளித்து வருகின்றனர்.
இப்படி இருக்க இப்பொழுது ஜீவா வசமாக மாட்டி கொள்ளும் சூழ்நிலை வந்தாலும் இன்னொரு பக்கம் விஜயாவிடம் ரோகினியும் சிக்கி கொள்ளும் சூழ்நிலை வருமாம். இதை வைத்து தான் அடுத்தடுத்து சீரியல் நகர உள்ளதாம்.