IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 46 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் மூலம் RCB அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் தொடரில் அதிகமுறை 500 ரன்களுக்கு மேல் எடுத்த டேவிட் வார்னரின் சாதனையை சமம் செய்துள்ளார். இவருக்கு தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.