தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால், பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திரிபுரா மாநிலத்தில் அதிகபட்ச வெப்பநிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்.., ஒரே நேரத்தில் மாட்டிக்கொள்ளும் ரோகினி, ஜீவா.., அதிர்ச்சியில் குடும்பம்!!
இதனை கருத்தில் கொண்டு திரிபுரா மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, இன்று (ஏப்ரல் 24) முதல் நான்கு நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அதேபோல் வெளியிடங்களில் சென்று வரும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, நிழற்குடைகள் உள்ளிட்ட தேவையான ஏற்பாடுகளை வருவாய்த்துறை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.