சென்னையில் இம்மாத தொடக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், இன்று 2வது முறையாக விலை மேலும் ரூ.50 அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமையல் எரிவாயு:
இந்தியாவில் மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை எண்ணெய் நிறுவனங்களால் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை, ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக மாற்றம் செய்யப்படாமல் இருந்த சிலிண்டரின் விலை இம்மாத தொடக்கத்தில் ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.660 ஆக அதிகரித்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்திய ரயில்வே துறையில் 1.4 லட்சம் காலிப்பணியிடங்கள்!!
இன்றும் சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.710 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒரே மாதத்தில் சிலிண்டர் விலை ரூ.100 உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.