இந்தியாவில் பெரும்பாலானோர் விரும்பும் ரயில் போக்குவரத்தில், பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மலிவு விலையில் உணவுகளை விற்பனை செய்வதற்கான திட்டத்தை IRCTC அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டம் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு ஆகிய கோட்டத்திற்கு உட்பட்ட 34 ரயில் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4.., நல்லா படிச்சு இருக்கீங்களானு செக் செக் பண்ண ஒரு வாய்ப்பு.., விவரம் உள்ளே!!
இதில் ரூ.3க்கு 200 ml தண்ணீர் பாட்டில், ரூ.20க்கு ‘எகனாமி மீல்ஸ்’, ரூ.50க்கு ‘ஸ்னாக் மீல்ஸ்’ என்ற பெயரில் தென்னிந்திய உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த உணவுப் பொருள் விற்பனை கவுண்டர்கள், Unreserved பெட்டி நிற்பதற்கு அருகே இருக்கும் படியும் அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.