தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் வெப்ப அலை வீசுவதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அதிக வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக அசெள கரியம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கு வங்காளத்துக்கு சிவப்பு நிற எச்சரிக்கை, ஒடிசாவுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.