தமிழகத்தில் சமீப காலமாக பல்வேறு அரசு துறை ஊழியர்களும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது வட்டாரப் போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஊழியர்கள், வரும் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இப்போராட்டத்தில் பதவி உயர்வு, காலியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.