இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவியிடையே நடைபெறும் தொடர் சண்டை, சச்சரவு காரணமாக பல விவாகரத்து தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கணவன் மனைவி தொடர்பாக ஓர் முக்கிய கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதாவது மனைவிக்கு சீதனமாக தரப்படும் சொத்தில் கணவருக்கு எந்த உரிமையும் இல்லை என குறிப்பிட்டுள்ளது. அவசர தேவைக்கு அந்த சொத்தை அவர் பயன்படுத்தி இருந்தாலும் அதை திருப்பி தர வேண்டியது கணவரின் கடமை எனவும் தெரிவித்துள்ளது. தற்போது இச்செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.