IPL தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை ராஜஸ்தான், டெல்லி, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளை தவிர மற்ற அணிகள் தலா 10 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளனர். அந்த வகையில், நேற்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்த்து சென்னை விளையாடியது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதன் காரணமாக தற்போது புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து கொல்கத்தா, லக்னோ, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.