நாடு முழுவதும் வீடு மற்றும் வணிக இடங்களில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோரின் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை சிலிண்டரின் ரெகுலேட்டர், ரப்பர் குழாய் ஆகிய இயக்கத்தை, சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்கள் ஆய்வு செய்து வந்தனர். இதற்கிடையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால், அது தொடர்பான புகார்களை பயனாளர்கள் சரியாக தெரிவிப்பதில்லை.
மஞ்சள் அலர்ட்.. சுட்டெரிக்கும் வெயிலால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. பயத்தில் மக்கள்!!
இதனை கருத்தில் கொண்டு எட்டு அம்ச பாதுகாப்பு சோதனைகளை, சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்களே இலவசமாக ஆய்வு செய்வார்கள் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன்மூலம் விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வும் அறிவுறுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.