நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
கேஸ் சிலிண்டர் பயனாளிகளுக்கு குட் நியூஸ்., இனி இந்த வசதி இலவசம்? வெளியான முக்கிய தகவல்!!!
இதனால் பல்வேறு முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கேரளாவில் இன்று (ஏப்ரல் 24) மாலை முதல் ஏப்ரல் 26ஆம் தேதி மாலை 6 மணி வரையிலும் மதுக் கடைகள், பார்கள் மூடி இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.