இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 51 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சச்சின் 24 ஏப்ரல் 1973 இல் மும்பை, மகாராஷ்டிராவில் பிறந்தார். அவர் இந்தியாவின் சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் கிரிக்கெட் ரசிகர்களால் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி., இரண்டு நாட்களுக்கு மதுக்கடைகள் Closed? அறிவிப்பை வெளியிட்ட கேரளா!!!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதை தொடர்ந்து ஒரு காலண்டர் ஆண்டில் (1998) 100+ ஸ்ட்ரிக் ரேட் உடன் 6 ஒருநாள் சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 25 ஏப்ரல் 1990 – 24 ஏப்ரல் 1998 இடையே, சச்சின் இடைவேளையின்றி 239 போட்டிகளில் (185 ODIகள் + 54 டெஸ்ட்) தொடர்ச்சியாக விளையாடினார். இது இன்னும் உலக சாதனையாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.