நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களுக்கேற்ப பொது விடுமுறை வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் வருகிற மே 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சச்சின் டெண்டுல்கர்.. லெஜெண்ட் -க்கு குவியும் பர்த்டே விஷ்!!
இதையடுத்து மே 7ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) பொது விடுமுறை வழங்கப்படுவதாக குஜராத் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உட்பட பலர் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.