தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டின் இறுதி தேர்வு கடந்த ஏப்ரல் 27 ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் மாணவர் சேர்க்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த மாதம் மட்டும் 2.90 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.