உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் பெண் ஒருவர் 4 இளைஞர்களால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனக்கு வலியுறுத்தி உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
பெண் பாலியல் பலாத்காரம்:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் மனிஷா, 19. இவர் தலித் இனத்தை சேர்ந்தவர். இவர் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி வயலில் வேலை பார்த்துள்ளார். அப்போது அங்கு வந்த 4 இளைஞர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர் இந்த விவகாரத்தை யாரிடமும் சொல்ல கூடாது என்பதற்காக அவரது நாக்கினை துண்டித்துள்ளனர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
அதே போல் அவரது கழுத்து, முதுகு தண்டுவடம் போன்ற பகுதிகளை பலமாக காயப்படுத்தி உள்ளனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைத்தார். இந்த சம்பவம் நாடு முழுவதிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல அரசியல் கட்சி பிரமுகர்கள், தலைவர்கள் கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
தொடர் கண்டன குரல்கள்:
அனைத்து மக்களும் தங்களது கண்டனங்களை சமூக வலைதளத்திலும் பதிவு செய்து வந்தனர். ட்விட்டரில் #JusticeForHathrasVictim, #JusticeForManisha, #RIPManishaValmiki போன்ற ஹேஷ்டாக்குகள் டிரண்ட் செய்யப்பட்டு வருகின்றன.
கொரோனா பாதித்த இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் காலமானார் – தலைவர்கள் இரங்கல்!!
இதனை அடுத்து அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் கூறியதாவது “இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக எனக்கு அறிவுறுத்தி உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.