தற்போது உள்ள காலகட்டத்தில் நோய் நொடிகள் இல்லாமல் வாழ்வது என்பது அரிதான ஒன்று. ஏனெனில் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுகிறோம். அதுவும் நேரத்திற்கு கூட சாப்பிடுவதில்லை. இப்பொழுது முருக பெருமானை வழிபட்டு நோய் நொடி இல்லாமல் செல்வ செழிப்போடு வாழ்வது எப்படி என்பதை காணலாம்.
முருகன் வழிபாடு
நமக்கு கஷடம் வரும் வேளையில் மட்டும் தான் இறைவனை நினைத்து வழிபடுகிறோம். ஆனால் அது முற்றிலும் தவறு என்று சாஸ்திரம் கூறுகிறது. அதாவது இன்பம் வரும் வேளையிலும் கடவுளை நினைத்து வழிபட வேண்டும்.
தன்னை நினைத்து வழிபாடுபவர்களை கைவிடாமல் அருளை வாரி வழங்குவதில் சிறந்தவர் முருக பெருமான். பல பெயர்களை கொண்ட முருகனை வழிபடுவதற்கு சிறந்த நாள் சஷ்டி ஆகும். சஷ்டி தினத்தன்று விரதம் இருப்பவர்களுக்கு அருளை வாரி வழங்குவார். மேலும் சஷ்டிகளில் விரதம் இருந்து அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வந்தால் நனைத்தது நிறைவேறும். திருமண தடையும் அகலும்.
இந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் தொடர்ந்து 6 நாட்கள் இருக்க வேண்டும். அந்த 6 நாட்களில் அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது. வீட்டை வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் பூண்டு, வெங்காயம் மற்றும் கிழங்கு வகைகளை உணவுகளில் கூடாது. சிவா பெருமானுடன் முருகன் இருப்பது போன்ற உருவ படத்தை வைத்து வேண்ட வேண்டும். இவ்வாறு 6 நாட்கள் வழிபட்டு வருவதால் நோய் நொடிகள் நீங்கும். மேலும் குடும்பங்களில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் விலகும். கணவன் மனைவி பிரச்சனைகள் கூட தீரும். எனவே சஷ்டி தினங்களில் முருக பெருமானை முழு மனதுடன் வேண்டி வந்தால் நினைத்த காரியத்தில் ஜெயம் தான்.