Thursday, May 2, 2024

அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

Must Read

நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் இருக்கும் மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான கனமழை:

தமிழகத்தில் கடந்த மாதம் பருவமழை துவங்கியது. இந்த ஆண்டு கனமழை எதிர்பார்த்ததை விட குறைவாக பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது நவம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிக்கு வானிலை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

நாளை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் தான் இருக்கும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்புகள் உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

தமிழகத்தில் வெப்பநிலையினை பொறுத்தவரை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகவில்லை.

50 சதவீத பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று கருத்து – கல்வித்துறை தகவல்!!

தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறார்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

அரசு ஊழியர்களே., அகவிலைப்படியோடு இந்த கொடுப்பனவும் உயர்வு? DoP&T வெளியிட்ட முக்கிய தகவல்!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -