பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் வனிதா?? ஒரு ட்வீட்டால் ஏற்பட்ட பரபரப்பு!!

0

விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது என்றே சொல்லலாம். சில நாட்களாக சண்டையே இல்லாமல் ஓடிக்கொண்டிருந்த எபிசோடில் அனிதா பழைய மாதிரி பஞ்சாயத்து வைக்க ஆரம்பித்து விட்டார். ஒரு சாம்பாருக்கு இவ்வளவு சண்டையா? என மக்கள் கேலியும் செய்தனர். இந்நிலையில் வனிதா அதற்கு ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் பலரும் வனிதா பிக் பாஸ் வீட்டிற்கு போக போகிறாரா?? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் நுழையும் வனிதா??

இந்த பிக் பாஸ் சீசனில் ஆரம்பித்த காலத்திலிருந்தே பல சண்டைகள் ஓடிக்கொண்டுள்ளது. வாராவாரம் கமல் வந்து ஒவ்வொருவரின் முகத்திரையை கிழித்துக்கொண்டு தான் உள்ளார். அதன் பிறகு 2 நாட்கள் அமைதியாக இருக்கும் போட்டியாளர்கள் பின் வழக்கம் போல ஆரம்பித்து விடுகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

bigg boss season 4
bigg boss season 4

இது ஒருபுறம் இருக்க தற்போது தொடர்ந்து பல காதல் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சம் இடம் பெறுகிறது. மேலும் சில நாட்களாக அமைதியாக இருந்த அனிதா திரும்பவும் ஆரம்பித்துள்ளார். இதனால் மக்கள் பலரும் கடுப்பாகியுள்ளனர். முந்தைய எபிசோடில் கூட காரணமே இல்லாமல் சண்டையிட்டார். கேவலம் ஒரு சாம்பாருக்கு இவ்வளவு அக்கப்போறா?? என்று பலரும் கலாய்த்தும் வந்தனர்.

அதன் பின் ரியோவும் அனிதாவும் சமாதானம் ஆகினர். இந்நிலையில் வனிதா சாம்பாருக்கு நடந்த சண்டையை வைத்து ஒரு ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அனிதாவை குறிப்பிட்டு ‘அனிதா சம்பத் பாசி பருப்பில் சாம்பார் வைக்கலாம் கன்னுகுட்டி, நான் உனக்கு சொல்லி தருகிறேன், விரைவில்’ என அந்த ட்வீட்டில் வனிதா கூறியுள்ளார். இதனால் பலரும் வனிதா பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே போக போறாரோ?? என்று குழம்பிப்போய் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here