பாலாஜிக்காக சண்டை போடும் ஷிவானி, கேபி – அதிர்ச்சியில் சக போட்டியாளர்கள்!! தரமான சம்பவங்களுடன் வெளியான ப்ரோமோ!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சுவாரசியமான பல டாஸ்குகளை கொடுத்து ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் சீரியஸ் ஆக விளையாடி கொண்டுள்ளனர். இப்பொழுது இந்த டாஸ்கால் போட்டியாளர்கள் இடையே வழக்கம் போல பிரச்சனையும் ஏற்படுகிறது. இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 4

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தீபாவளி ஸ்பெஷலாக தற்போது பல சுவாரசியமான டாஸ்குகள் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. அதாவது ஒரு கிராமத்து செட்டப்பில் பிக் பாஸ் போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு குடும்பத்தில் பாட்டியாக இருக்கும் அர்ச்சனாவின் கையில் உள்ள சொத்து பத்திரத்தை யார் வாங்க போகிறார்கள் என்பதே போட்டி.

மேலும் அர்ச்சனா தன்னை சந்தோசமாக வைத்திருப்பவர்களுக்கே இந்த பத்திரத்தை தருவேன் என்று கூற பலரும் விழுந்து விழுந்து கவனித்து வருகின்றனர். மேலும் பலரும் ஷிவானியை கிண்டலடித்தும் வந்தனர். அர்ச்சனாவை கவனிக்க சொன்னா, ஷிவானியை கவனிச்சிட்டு இருக்கீங்க என்று பலரும் கழுவி ஊற்றினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் பத்திரத்தை திருட சோம், ரம்யா, கேபி கூட்டாளியாக நியமிக்கப்பட்டனர். ஆனால் இது ஹவுஸ் மேட்ஸ் யாருக்கும் தெரியாது. மேலும் நேற்று சோம் எப்படியோ அர்ச்சனாவிடம் இருந்து பத்திரத்தை திருடி ஒரு இடத்தில் ஒளித்து வைக்க அது பாலாஜி கண்ணில் பட்டு எடுக்கிறார்.

இதனை ரம்யா, கேபி பார்த்து விட உனக்கு எப்படி இந்த பத்திரம் கிடைத்தது என்று கேட்க பாலாஜி எனக்கு தெரியாது என்று கூறுகிறார். மேலும் பாலாஜி தான் திருடன் என்றும் முடிவெடுக்கின்றனர். இதனால் பாலாஜி கடுப்பாகி கேபியிடம் கத்துகிறார். மேலும் சோம் இதையெல்லாம் நக்கலாக பார்த்து சிரிக்கிறார்.

மேலும் கேபி மற்றும் பாலாஜி இடையே சண்டை ஓடிக்கொண்டிருக்க ஷிவானியும் சண்டைக்குள் வருகிறார். மேலும் கேபி பாலாஜியை சொன்ன நீ எதுக்கு வர?? என்று ஆரம்பிக்க கேபி, ஷிவானி இடையே பெரிய சண்டை ஏற்படுகிறது. இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here