சென்னையை சேர்ந்த பெண் ஒருவர், உணவு பொருட்களை வீட்டில் சென்று டெலிவரி செய்வது போல் கஞ்சாவை விற்பனைசெய்துள்ளார்.
கஞ்சா விற்பனை:
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வனிதா, 36. இவர் கடந்த சில நாட்களாக வீட்டில் சென்று உணவு வழங்கும் ஸ்விக்கி , ஸ்மோடோ நிறுவனங்கள் போல் கஞ்சாவை வீட்டில் சென்று விற்பனை செய்துள்ளார். இவர் கோயம்பேட்டில் இருந்து கஞ்சாவை வாங்கி விற்பனை செய்துள்ளார்.
போலீசில் புகார்:
இவர் மேல் சந்தேகம் கொண்ட சிலர், போலீசாரிடம் புகார் ஒன்றை தெரிவித்துள்ளனர், அதனால் போலீசார் உடனடியாக சென்று விசாரித்ததில், இவர் இவ்வாறு தினுசாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. அதனால், உடனடியாக போலீசார் இவரை கைது செய்துள்ளனர்.
தொடரந்து 3 வது ஆண்டாக வளர்ச்சி விகிதம் – 2 வது இடத்தில் தமிழகம்!!
இவரிடம் இருந்து போலீசார் 3 கிலோ கஞ்சா, 500 ரூபாய் பணம் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்துள்ளனர்.